Category: வர்த்தகம்

Home வர்த்தகம்
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்பு
Post

டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், இணைப்பு நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5...

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
Post

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு...

ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு
Post

ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின்  நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 3ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை  அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் வெங்கடரமணன்,  ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்...

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Post

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதன் மூலம்,...

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு
Post

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) தங்கம் கிராம், 14,725 ரூபாய்க்கும், சவரன், 1,17,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது....

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
Post

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
Post

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை
Post

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின்...