பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ....
Category: தலையங்கம்
ராகுல் காந்தி கேள்வியை கண்டு பாஜக அரசு அஞ்சுவது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
“ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற...
“பட்டியலில் உங்கள் வாக்குகள் இல்லையெனில்…” உதயநிதி வேண்டுகோள்
சென்னை: “வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள்” என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை கிழக்கு மாவட்டக் கழகம், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: “பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இன்றைக்குத் தமிழகம்...
“பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” – நடிகை மஞ்சு வாரியர் ஆதங்கம்!
திருவனந்தபுரம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்குநன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...
புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு இனி, அனைத்திந்திய அண்ணா...
தினசரி சந்தையை திறக்க கோரி தரையில் உருண்டு போராடிய முன்னாள் மேயர்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் இடித்து அகற்றப்பட்டு, ரூ.10.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இங்கு, 75 கடைகள் உள்ளன. கடைகளுக்கு சதுரஅடிக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டன. இதனால், 25 கடைகள் மட்டுமே ஏலம் போயின. இந்நிலையில், ஏலம் எடுக்கப்பட்ட கடைகளும் வாடகை அதிகம்...
பாக்ஸ் சிலிக்கா என்ற புதிய வகையான சர்வதேச கூட்டமைப்பு; இந்தியாவுக்கு இடமில்லை
வாஷிங்டன்: நம்பகமான நட்பு நாடுகளுடன் AI துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க எட்டு நாடுகள் அடங்கிய ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. ஆனால், இதில் இந்தியாவுக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாக்ஸ் சிலிக்கா என்பது புதிய வகையான சர்வதேச கூட்டமைப்பு. புதிய செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள எட்டு நாடுகள், அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்...
“கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” – திருவனந்தபுரம் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
புது டெல்லி: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. ஆளும் எல்டிஎஃப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக...
“மதத்தைப் போற்றுகிறீர்கள் ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா? ” – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான் கேள்வி
சென்னை: “முருகன், சிவன், மாயவன் இந்து கடவுளா?. இது பற்றி என்னோடு யாராவது தர்க்கம் செய்ய முடியுமா?” என்று என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சினையாக்க முயற்சிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினையை இப்போது கையில் எடுப்பது ஏன்? திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம். தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த ஆட்சி நிறைவேற்றிய...
திருவண்ணாமலையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மாலை திறந்துவைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி வரும் 20ந்தேதிவரை ஒருவாரம் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு துவக்கிவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன்...








