இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுபெரும் அரசியல்...
Category: அரசியல்
நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின்: நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து...
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
அவதூறு வழக்கில் ஆஜரான ராகுல் காந்தி: மார்ச்.9- ஆம் தேதி அடுத்த விசாரணை
அவதூறு வழக்கின் விசாரணைக்காக உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். ராகுல் காந்தி நேற்று காலை 10.40 மணியளவில் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து காலை 11.15 மணியளவில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து, ரேபரேலியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவரின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா...
பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பீகாரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. குற்றவாளிகளை நிதிஷ் அரசானது பாதுகாக்கிறது. முதல்வர் அலட்சியமாக இருப்பது, துரதிருஷ்டவசமானது. அவர் பாஜ கைப்பாவையாக மாறிவிட்டார்....
திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்
திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப்...
பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை: பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சீன ஆக்கிரமிப்பு குறித்து கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் தடுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் உள்ள எல்லைப் பிரச்னை குறித்து ராகுல் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி அவைக்கு வரும் போது அவரிடம்...
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ நாடுகள் உடைந்து சிதறும்!
கோபன்ஹேகன்: கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்கின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார். இதுகுறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேற்று கூறியதாவது: இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு...
மக்கள் எப்போதும் நமது அரசின் பக்கம் தான் உள்ளனர். திரும்பவும் நாங்கள் தான் வருவோம்!
திண்டுக்கல்: அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள்...
“எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு பழனிசாமிக்கு உண்டு”!
சென்னை: “எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?” என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10...



![X]_vb_47 திமுக கூட்டணியில் தேமுதிகஇணைந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்](https://metropeople.in/wp-content/uploads/2026/02/X_vb_47-360x360.jpeg)


