தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும், கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு...
