சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க 7ம் வகுப்புக்கு மேல் பயிலும் 1 லட்சம் பள்ளி மாணவர்கள் சூப்பர் குட்டி போலீசாக செயல்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஐஐடியுடன் இணைந்து புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.