Category: இந்தியா

Home இந்தியா
”லாக்டவுன்” படத்தின் டிரெய்லர் வெளியானது
Post

”லாக்டவுன்” படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் ‘லாக் டவுன்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில்...

கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்தை கரம்பிடித்தார் நடிகை சம்யுக்தா
Post

கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்தை கரம்பிடித்தார் நடிகை சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை சம்யுக்தா பிரபலமானார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் விஜய்யின் வாரிசு, காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சம்யுக்தா குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் பிறந்தார். இந்த சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன்...

WPL Auction 2026:  விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி
Post

WPL Auction 2026: விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி

அடுத்த ஆண்டு 4-ஆவது மகளீர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி விலை போகாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (நவ.27) டெல்லியில் நடைபெற்றது. ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா...

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்
Post

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், போட்டியில் தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடன் மன்னிப்பு கேட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட்...

Post

காங்கிரஸ் தலைமை அழைத்தால் டெல்லி செல்வேன்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ‘காங்கிரஸ் உயர் தலைமை அழைத்தால் டெல்லிக்குச் செல்வேன்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று நவம்பர் 20 அன்று தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முதல் பாதியை கடந்தது. ஆட்சியின் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் டி.கே.சிவகுமார் முதல்வராகவும் இருப்பார்கள் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின்...

Post

மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆதரவாக முழக்கம்: ஜே.என்.யூ மாணவர் சங்கம் மறுப்பு

டெல்லி காற்று மாசு போராட்டம் தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) நேற்று முன்தினம் மறுத்தது.வழக்கில் போலியான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கேட் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர்....

Post

இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும்...

Post

மத்திய அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாதது ஏன்?: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சர்ச்சை பதில்

முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார். கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார். மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து...

Post

சபரிமலை தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம்...

Post

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி: சௌரவ் கோகோய் குற்றச்சாட்டு

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக அஸ்ஸாம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய் குற்றஞ்சாட்டியுள்ளார். பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த...