விசாகப்பட்டினத்தில் அமையும் ஏ.ஐ. மையம் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் – சுந்தர் பிச்சை பேச்சு

விசாகப்பட்டினத்தில் அமையும் ஏ.ஐ. மையம் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் – சுந்தர் பிச்சை பேச்சு

புதுடெல்லி : டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டை தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் , பில்கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஐ உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பேசியதாவது..

” இந்தியாவுக்கு மீண்டும் வருவது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் நான் வியப்படைகிறேன். நான் ஒரு மாணவனாக இருந்தபோது சென்னையில் இருந்து ஐ.ஐ.டி கரக்பூர் வரை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி சென்றேன். அந்த ரெயில் விசாகப்பட்டினம் வழியாக செல்லும். இப்போது விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏ.ஐ மையத்தை நிறுவ உள்ளது.

இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி மற்றும் ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி கேபிள் நுழைவாயிலைக் கொண்டிருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் அதிநவீன ஏ.ஐ-யையும் கொண்டு வரும். ஏ.ஐ என்பது மறுக்க முடியாத வகையில் பணியாளர்களை மறுவடிவமைக்கும். முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும்” என்றார்.