இந்தியாவின் ஏ.ஐ. உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனை: பிரதமர் மோடி

இந்தியாவின் ஏ.ஐ. உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனை: பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது,

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.

செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.

டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.

எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.