மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட...
