தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில்பறக்கிறது: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சட்டு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில்பறக்கிறது: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சட்டு

டம்மி முதல்வரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ராமநாதபுரம்,  சிவகங்கையில் இரட்டைக் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” “Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?

‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையா னவர்களின் உறவினர்கள் காளையார் கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.