ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். காமராஜர் காலை உணவுத் திட்டம் வருகிற செப். 17 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கிவைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சொந்த செலவில் செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது...
