ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தின் பிட்ச் மிகச் சிறந்தது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவ. 21-ஆம் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது.
இதனால் ஐசிசி பிட்ச்-ன் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆய்வு செய்ததில் பிட்ச் மதிப்பு நன்றாக உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கினார்.
ஐசிசி பிட்ச் மதிப்பீடு அமைப்பில், பிட்ச்சுகளை ‘மிகச் சிறந்தது’ (Very Good), ‘நல்லது’ (Good), ‘சராசரி’ (Average), ‘திருப்திகரமற்றது’ (Unsatisfactory) என வகைப்படுத்துகிறது.
இதில் ஐ.சி.சியின் 4 வகை பிட்ச் மதிப்பீட்டு முறையின்படி, ‘மிகவும் நல்லது’ என்பது அவர்களின் மிக உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் இரண்டு நாள் நடந்த போட்டியின் போது பிட்ச் நல்ல கேரி, வரையறுக்கப்பட்ட சீம், ஸ்விங் மற்றும் சரியான பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply