பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

பீகாரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. குற்றவாளிகளை நிதிஷ் அரசானது பாதுகாக்கிறது. முதல்வர் அலட்சியமாக இருப்பது, துரதிருஷ்டவசமானது. அவர் பாஜ கைப்பாவையாக மாறிவிட்டார். கடந்த காலங்களில் அவர் முதல்வராக பதவியேற்ற போது எந்த முக்கிய துறைகளையும் யாரிடமும் கொடுக்கவில்லை. தம்வசமே வைத்து இருந்தார். இப்போது உதவிக்கு கூட, தம்மிடம் யாரும் இல்லாத சூழலில் இருக்கிறார். பலவீனமான தலைவராகிவிட்டார். உள்துறை அமைச்சகம் கூட அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.