மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய நடைமுறையை வகுக்கவும், 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர். இதில்...
