சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஸ் மாத்ரே 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஷாட்களை ஆடி பஞ்சாப்...
Category: இந்தியா
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலியிறுதியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா
Madison Keyes சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா ஆகியோர் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஹங்கேரியின் அன்னா பண்டார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில்...
நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் விஜய்! பெரம்பூர் தொகுதியில்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல்...
மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி: சேப்பாக்கத்தில் கோலாகலம்…
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக ‘ரோர்26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ்...
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! நாளை விசிக மீண்டும் ஆலோசனை…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இன்னும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிகவுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இக்கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்களுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில்...
மேற்கு ஆசியாவில் நிலவும் போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிப்பதாகவும் பேச்சுவார்த்தை மூலமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “உலகில் நிலவும் பல்வேறு பதற்றங்கள் நிலவும் சூழ்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு...
தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுபெரும் அரசியல்...
நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின்: நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து...
8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா
8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எதிவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில்...
கேரளாவில் நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த நீர்வழி சுரங்க பாதை தற்போது நாட்டிலே முதல் முறையாக ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கப்பட்டு உள்ளது. அதனை முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த புதிய சிலாக்கூர் நீர் வழி சுரங்க...









