பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நேற்று நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது:

இட ஒதுக்​கீட்​டின் முன் ஐஏஎஸ் அதி​காரி​யின் குழந்​தையை​யும், ஒரு சாதாரண ஏழை விவ​சா​யத் தொழிலா​ளி​யின் குழந்​தையை​யும் சமமாகக் கருத முடி​யாது. எனவே, பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன். இந்​திரா சஹானி தீர்ப்​பின்​படி பிற்​படுத்​தப்​பட்ட சமூகத்​தினரில் நல்ல பொருளா​தார நிலை​யில் உள்​ளவர்​களை கிரீமி லேய​ராக பிரித்து அவர்​களுக்​கான சலுகைகள் ரத்து செய்​யப்​பட்​டன.

இதே​போன்று பட்​டியலின பிரி​வினரிலும் கிரீமி லேயர் வரையறுக்கப்பட்டு அவர்​களுக்​கான இடஒதுக்​கீடு சலுகைகள் ரத்து செய்​யப்பட வேண்​டும். இந்த தீர்ப்பை நான் வழங்​கிய​போது கடும் விமர்​சனம் எழுந்​தது.

நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்​துச் செல்ல சமூக மற்​றும் பொருளா​தார ரீதி​யான நீதி​யைப் பெற சமத்​து​வம், சுதந்​திரம், சகோ​தரத்​து​வம் ஆகியவை அவசி​ய​மானது.

அரசி​யலமைப்​பின் காரண​மாகவே பட்​டியல் சமூகத்​திலிருந்து 2 பேர் நாட்​டின் குடியரசுத் தலை​வர்​களாக ஆக முடிந்​தது. மேலும், ஒரு பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலை​வ​ராக ஆக முடிந்​திருக்​கிறது. நீதி, சமத்​து​வம், சுதந்​திரம், சகோ​தரத்​து​வம் ஆகியவை இந்​திய அரசி​யலமைப்​பின் நான்கு தூண்​கள்.

இந்​திய அரசமைப்​புச் சட்​டத்​தில் காலத்​துக்​கேற்ப மாற்​றங்​களைக் கொண்​டு​வரவே சட்​டப்​பிரிவு 368 ஏற்​படுத்​தப்​பட்​டது. ஒரு​புறம் அரசமைப்​புச் சட்​டத்​தில் மிக எளி​தாக திருத்​தம் மேற்​கொள்​வதை பி.ஆர்​.அம்​பேத்​கர் விமர்​சித்​தார்.

மறு​புறம் சில சட்ட திருத்​தங்​களுக்கு 50 சதவீத மாநிலங்​களின் ஒப்​புதல் மற்​றும் நாடாளு​மன்​றத்​தில் மூன்​றில் 2 பங்கு பெரும்​பான்மை தேவை என்ற விதிக்​கும் கடும் விமர்​சனம் எழுந்​தது. அரசமைப்பு நிர்ணய சபைக் கூட்​டத்​தில் வரைவு அரசமைப்​புச் சட்ட முன்​மொழிவின்​போது அம்​பேத்​கர் ஆற்​றிய உரைகளை சட்​டம் பயிலும் மாண​வா்கள் நிச்​ச​யம் வாசிக்க வேண்​டும்.

அடுத்த வாரம் எனது பணியி​லிருந்து ஓய்வு பெறவுள்​ளேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிப​தி​யாக நான் பங்​கேற்ற கடைசி நிகழ்ச்​சி, ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் நடந்​துள்​ளது. தலைமை நீதிப​தி​யாகப் பொறுப்​பேற்ற பிறகு நான் பங்​கேற்ற முதல் விழா மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள எனது சொந்த ஊரான அமராவ​தி​யில் நடந்​தது.

மகா​ராஷ்டிர மாநிலம் அமராவ​தி​யின் குடிசைப் பகு​தி​யில்​ உள்​ள அரசுப்​ பள்​ளி​யில்​ படித்​து நீதித்​துறை​யின்​ மிக உயரிய பொறுப்​பை ​நான்​ ஏற்​க​ அரசமைப்​புச்​ சட்​டமே ​காரணம்​. இவ்​​வாறு பி.ஆர்.கவாய் பேசி​னார்​.

Leave a Reply

Your email address will not be published.