Category: அரசியல்

Home அரசியல்
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Post

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு, மூச்சுத் திணரல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல்...

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி என அறிவிப்பு
Post

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி என அறிவிப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப்.09) அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.09) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு...

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா
Post

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அ.தி.​மு.க எம்.​எல்.​ஏ.க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்
Post

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த திங்கள்கிழமை (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியபோது முதல்வர் விஜய் மிசா குறித்துப் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார். முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும்...

சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்
Post

சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்

திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய் என பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்வதே மரபு. 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. எத்தனை ரீல்ஸ் போடலாம் என்பதை மையமாக வைத்தே முதல்வரின் பதில் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவரின் 15 கேள்விகளுக்கு முதல்வர் பதில் தரவில்லை. தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து...

சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு
Post

சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரை அளிக்கும்போது, திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது,...

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Post

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.  தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச...

சாதியின் பெயரை கேட்காமல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி
Post

சாதியின் பெயரை கேட்காமல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் சாதியின் பெயரை கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகள் பட்டியலை கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓபிசி மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி பட்டியல்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும்,...

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Post

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, புதுடெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதாளர்களை தனது தனது இல்லத்தில், சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர், ‘’செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களின் மூலம் மாணவர்கள் திரையில் அதிக நேரத்தை செலவிடுவது...

அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
Post

அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு...