19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக ‘ரோர்26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ்...
Category: தலையங்கம்
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! நாளை விசிக மீண்டும் ஆலோசனை…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இன்னும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிகவுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இக்கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்களுடன் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில்...
சட்டசபை தேர்தல்: 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவு: களைகட்டும் தேர்தல் பிரசாரம்
கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்பாளர்களை அறிவித்தன. அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தொடர்ந்து தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. புதுச்சேரியில் 30 உறுப்பினர் சட்டசபை தேர்தலுக்கான...
இந்தியாவின் ஏ.ஐ. உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனை: பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ....
ராகுல் காந்தி கேள்வியை கண்டு பாஜக அரசு அஞ்சுவது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
“ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?. அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற...
“பட்டியலில் உங்கள் வாக்குகள் இல்லையெனில்…” உதயநிதி வேண்டுகோள்
சென்னை: “வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள்” என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை கிழக்கு மாவட்டக் கழகம், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: “பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இன்றைக்குத் தமிழகம்...
“பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” – நடிகை மஞ்சு வாரியர் ஆதங்கம்!
திருவனந்தபுரம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்குநன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...
புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு இனி, அனைத்திந்திய அண்ணா...
தினசரி சந்தையை திறக்க கோரி தரையில் உருண்டு போராடிய முன்னாள் மேயர்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தினசரி சந்தையை திறக்கக் கோரி,முன்னாள் மேயர் தலைமையில் வியாபாரிகள் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி டவுன் பகுதியில் இயங்கிவந்த நேதாஜி போஸ் மார்க்கெட், ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின்கீழ் இடித்து அகற்றப்பட்டு, ரூ.10.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இங்கு, 75 கடைகள் உள்ளன. கடைகளுக்கு சதுரஅடிக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டன. இதனால், 25 கடைகள் மட்டுமே ஏலம் போயின. இந்நிலையில், ஏலம் எடுக்கப்பட்ட கடைகளும் வாடகை அதிகம்...
பாக்ஸ் சிலிக்கா என்ற புதிய வகையான சர்வதேச கூட்டமைப்பு; இந்தியாவுக்கு இடமில்லை
வாஷிங்டன்: நம்பகமான நட்பு நாடுகளுடன் AI துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க எட்டு நாடுகள் அடங்கிய ‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. ஆனால், இதில் இந்தியாவுக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாக்ஸ் சிலிக்கா என்பது புதிய வகையான சர்வதேச கூட்டமைப்பு. புதிய செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள எட்டு நாடுகள், அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்...








