Author: Senthil Kumar (Senthil Kumar)

Home Senthil Kumar
ஆவணி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
Post

ஆவணி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி (செப்.10) அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து...

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது தவெக: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
Post

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது தவெக: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகம் சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் சின்னமான...

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Post

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு, மூச்சுத் திணரல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல்...

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Post

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பதிப்புரிமை உத்தரவை மீறி பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இசை நிறுவனமான சரிகமா இந்தியா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்படும் பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகமா குற்றம்சாட்டியுள்ளது. 134...

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா
Post

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். அ.தி.​மு.க எம்.​எல்.​ஏ.க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்
Post

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த திங்கள்கிழமை (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியபோது முதல்வர் விஜய் மிசா குறித்துப் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார். முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும்...

சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்
Post

சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்

திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய் என பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்வதே மரபு. 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. எத்தனை ரீல்ஸ் போடலாம் என்பதை மையமாக வைத்தே முதல்வரின் பதில் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவரின் 15 கேள்விகளுக்கு முதல்வர் பதில் தரவில்லை. தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து...

சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு
Post

சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரை அளிக்கும்போது, திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது,...

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Post

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.  தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச...

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Post

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, புதுடெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதாளர்களை தனது தனது இல்லத்தில், சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர், ‘’செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களின் மூலம் மாணவர்கள் திரையில் அதிக நேரத்தை செலவிடுவது...