Category: இந்தியா

Home இந்தியா
அமிதாப் பச்சன் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு
Post

அமிதாப் பச்சன் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

கல்கி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் சந்தித்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில், முன்னணி...

ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் – அனிருத் காம்போ
Post

ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் – அனிருத் காம்போ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை 12:07 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி...

நடிகை கஜோலின் பெயர், புகைப்படங்கள் பயன்படுத்த தடை
Post

நடிகை கஜோலின் பெயர், புகைப்படங்கள் பயன்படுத்த தடை

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை கஜோல் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நடிகை கஜோல் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக நடிகை கஜோலின் பெயர், ஏஐ புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உருவத்தை ஒத்த ஏஐ புகைப்படங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல், ஏஐ மூலம்...

2028 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார்: ரிக்கி பாண்டிங்
Post

2028 டி20 உலகக் கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார்: ரிக்கி பாண்டிங்

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் நச்சத்திர ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால்...

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை
Post

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை

நாளை தொடங்கும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா,...

ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி
Post

ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி

'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற 'தி ஹண்ட்ரட்' தொடரின் எட்டு அணிகளில், நான்கு அணிகளில் தற்போது இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சஞ்சீவ் கோயங்கா), எம்ஐ லண்டன் (மும்பை இந்தியன்ஸ் - அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்), சதர்ன் பிரேவ் (டெல்லி கேப்பிடல்ஸ் -...

ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்
Post

ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன்(பிப்.20) முடிவடைகிறது. இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20...

Post

அவதூறு வழக்கில் ஆஜரான ராகுல் காந்தி: மார்ச்.9- ஆம் தேதி அடுத்த விசாரணை

அவதூறு வழக்கின் விசாரணைக்காக உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். ராகுல் காந்தி நேற்று காலை 10.40 மணியளவில் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து காலை 11.15 மணியளவில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து, ரேபரேலியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவரின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா...

Post

பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகாரில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்த கொண்டே வருகிறது என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பீகாரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. விசாரணை என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. குற்றவாளிகளை நிதிஷ் அரசானது பாதுகாக்கிறது. முதல்வர் அலட்சியமாக இருப்பது, துரதிருஷ்டவசமானது. அவர் பாஜ கைப்பாவையாக மாறிவிட்டார்....