கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம’ என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை...
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா
தமிழக சட்டப்பேரவையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருமே...
பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார். முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார். எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது...
ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 3ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில்...
ஆம்பூரில் பள்ளி மாணவிகள் கடத்தல் 3 பேர் போக்சோவில் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பள்ளி மாணவிகள் மூவரை ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதனைடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கட்சிகளை வைத்து பள்ளிக்கொண்டா அருகே மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து...
திருவண்ணாமலையில் பஞ்சமி நிலங்களைமீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலையில் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரிமாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் நிலமீட்பு கூட்டுயக்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சமி நில மீட்பு கூட்டுயக்கத்தின் சார்பில் ஆதிபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் த.சிவப்பிரகாஷ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.தமிழரசு தா.சிவதமிழன் பஞ்சமி நிலத்தை இழந்த ஆதிதிராவிடர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை...
நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதாவது, நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில்...
செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது, அவசர உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. டெல்லியில் ஜந்தர் – மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தை கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை டெல்லி காவல்துறை...
நேபாள வெள்ளத்தில் 5 அடி இடைவெளியில் தப்பித்தோம்; திகிலூட்டும் சம்பவத்தை விவரித்த திருச்சி பெண்!
கும்பகோணத்தில் உள்ள ‘சூப்பர் யாத்ரா’ டிராவல்ஸ் நிறுவனம் மூலம், தமிழகத்தை சேர்ந்த, 57 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். ஆக., 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், அவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில், 21 பேர் தப்பித்தனர். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், அவர்கள் மீட்கப்பட்டு, காத்மண்டுவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, விமான மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை வந்தனர். சென்னையில் தங்க வைக்கப்பட்டவர்களில், திருச்சி, உறையூரை சேர்ந்த சிவரஞ்சனி, என்பவர் சாலை மார்க்கமாக,...
திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி
திருப்பத்தூர் நகராட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (ARV – Anti-Rabies Vaccine) செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அவை பொதுமக்களை துரத்தி, தாக்க முயல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் தலைமையில், கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தெருநாய்கள் மற்றும்...








